Jala Deepam Part 2 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –34 இதுதான் முடிவா? இப்படித்தான் பிரிவா?
Jala Deepam Part 2 Ch34 | Jala Deepam | TamilNovel.in
மஞ்சுவின் அழகிய தோள்களை இறுகப் பிடித்த அவன் கைகளும் அகலவில்லை; அந்தப் புது மனிதன்மீது நிலைத்த அவன் விழிகளும் விலகவில்லை; ஏதோ பேயறைந்து விட்டவன்போல் நின்றுவிட்டான் இதய சந்திரன் பல வினாடிகள். ‘அவள் தந்தை’ என்று புது மனிதன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் புகுந்தது அவன் செவியிலல்ல. இதயத்தில் புகுந்து- சம்மட்டியால் ஓங்கி அடித்துக்கொண்டிருந்தன. ஆகையால் அவன் புத்தியும் கலங்கிச் சுழன்று கொண்டிருந்தது. வாழ்க்கைக் கடலில் அவனுக்கு மிகுதியிருந்த ஒரே ஒரு பலகையான மஞ்சுவும் கையிலிருந்து நழுவிவிடும் நிலை உருவாகிக் கொண்டிருந்ததையும், அப்படி அவளும் நழுவிவிட்டால் தன் கதி அதோ கதிதானென்பதையும் உணர்ந்த இதயசந்திரன் ஏதும் பேச நா எழாமல் நீண்ட நேரம் திகைத்தே நின்றான்.
“அவளை விட்டுவிடு என்று சொன்னேன்” என இரண்டாம் முறை அந்தப் புதுமனிதன் வலியுறுத்திய பிறகே சிறிது சுயநிலைக்கு வந்த இதயசந்திரன் அவள் தோள்களிலிருந்து கையை நீக்கி இரண்டடி பின்னடைந் தான். பிறகு மஞ்சுவை நோக்கிக் கேட்டான், “இது உண்மையா?” என்று.
ஆமென்பதற்கு அறிகுறியாக அவள் தலையை மட்டுமே அசைத்துவிட்டுத் தனது அறை நோக்கிச் செல்லத் திரும்பினாள். “தளபதி’ என்ற இதயசந்திரன் குரல் அவனைச் சற்றுத் தேக்க வைத்ததன்றி அவள் இதயத்தைச் சற்றுச் சுருக்கென்று குத்தவும் செய்தது. உள்ளிருந்த அவன்.
ஜல தீபம் பாசமும் நேசமும் மீண்டும் தலைகாட்டத் துவங்கினாலும் அவற்றை அடக்கிக்கொண்ட மஞ்சு மீண்டும் சற்றே தலையைத் திருப்பி, “என்ன?” என்று வினவினாள்.
“ஜல தீபத்தின் உபதளபதிப் பதவியிலிருந்து என்னை விலக்க உங்களுக்கு யார் அதிகாரமளித்தது? திரும்ப இங்கு. தளபதிப் பதவி ஏற்க உங்களுக்கு உத்தரவிட்டது யார்?” என்று வினவினான் . பதவியிலிருந்து விலக்கப்பட்ட சாதாரண வீரன் காரணம் கேட்பதுபோல.
மஞ்சுவின் விழிகள் அவன் விழிகளை அச்சமின்றிச் சந்தித்தன. “உபதளபதியை நீக்கத் தளபதிக்கு அதிகார முண்டு. தளபதியற்ற கப்பலுக்குத் தளபதியை நியமிக்க ஸார்கேலுக்கு அதிகாரமுண்டு” என்று அவளும் சம்பிரதாயமாகவே காரணம் காட்டினாள்.
“இந்த மாறுதலுக்குக் காரணங்கள் தேவையில்லையா” என்று வினவினான் இதயசந்திரன்.
மஞ்சுவின் கண்களில் ஏதோ யோசனை செய்யும் பாவம் விரிந்தது. அதைத் தொடர்ந்து உதிர்ந்த சொற்களில் உறுதியும் இருந்தது. தெளிவான கருத்தும் இருந்தது. “போர்கள் சதா நிகழும் காலத்தில் ஒரு போர்க்கப்பலின் தளபதியாய் இருப்பவரின் கடமை அந்தக் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டுச் சொந்த அலுவல்களைக் கவனிப்பதல்ல. இரண்டு நாளுக்கொரு முறையாவது கப்பலைச் சஞ்சரிக்க விட்டுக் கடல் பகுதியைக் கவனிக்க வேண்டும். அந்தக் கப்பலை ஓடவிடாவிட்டாலும் ஏதாவது இரண்டொரு கப்பலையாவது சஞ்சரிக்கவிட்டு நிலைமையைக் கண்ணுங் கருத்துமாகக் கவனித்து வர வேண்டும். அப்படி ஏதும் செய்யாமல் சில்லறை ஆசை களுக்காகச் சண்டை போடுவதும், மாளிகையில் படுத்துறங்குவதுமே வேலையாக ஒரு தளபதி இருந்தால், அந்தத் தளபதி கப்பலில் இருக்க லாயக்கற்றவர். அதுவும் சில நாள்களுக்கு முன்பு வெகு அருகில் நடந்த கடற்போரில் ஸார்கேலுக்குக்கூட உதவ முடியாதவர் மாலுமியா யிருப்பதே தவறு. இந்தத் தவறுதலுக்கு உங்களைச் சிறை செய்வது நியாயம். என் வளர்ப்புத் தந்தைக்கு உங்களிடம் உள்ள பரிவால் உங்களை அவமானத்திலிருந்து நீக்கித் தரைப்படைக்கு அழைத்துச் செல்கிறார்கள். போதுமா காரணங்கள்? இன்னும் தேவையா?” என்று வினவினாள் மஞ்சு.
இதயசந்திரன் சிலையென நின்றான். காரணங்கள் கோவையாயிருந்தாலும் அவையல்ல உண்மைக் காரணங்கள் என்பதை அவன் உணர்ந்தேயிருந்தான். உள்ளூரக் காதரைனைப் பற்றிப் புகைந்து கொண்டிருந்த பொறாமையும் அதனாலுண்டான எரிச்சலுமே அவள் குற்றச்சாட்டுக்குக் காரணங்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும் அந்தச் சமயத்தில், அந்தச் சூழ்நிலையில், தான் ஏதும் செய்ய முடியாது என்பதையும் சந்தேகமற உணர்ந்து கொண்டான். தன்னோடு தோளுக்குத்தோள் நின்று பல போர்களில் கலந்து கொண்டவர்களும் பல கஷ்டங்களை அடைந்தவர்களுமான பர்னாண்டோ, ஹர்கோவிந்த், இப்ரஹீம் இம்மூவரும் மாறுபட்ட குணங் களுக்குக் காரணம் மஞ்சுவின் கண்டிப்பைத் தவிர, தான் தோர்லாவாடாவில் காதரைனுடனும் இருந்து விட்டது தான் என்பதையும் புரிந்து கொண்டதால் அந்தக் கப்பலில் உபதலைவர்களோ, மாலுமிகளோ யாரும் தன்னை அணுவளவும் மதிக்கமாட்டார்களென்பதையும் அறிந்து கொண்டான். மஞ்சுவை உயிருக்குயிராக நேசித்த மாலுமி களும் ஜல தீபத்தின் உபதளபதிகளும் காதரைனுக்கு எதிராக, அதனால் தனக்கு எதிராக, எத்தனை முறை நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்த்தான். தான் ஜல தீபத்தின் விஷயத்தில் அசட்டை காட்டிவிட்டதே அவர்கள் வெறுப்புக்குக் காரணமென்ப தையும், அந்த வெறுப்புடன் மஞ்சுவின் கட்டுத் திட்டமும் சேர்ந்து அவர்களைத் தன்னை வெறுக்கும்படி செய்திருக்க வேண்டுமென்றும் தீர்மானத்துக்கு வந்தான். எப்படியும் அந்த விரோதத்துடன் ஜல தீபத்திலிருந்து அகன்று விட இஷ்டப்படாமல் மஞ்சுவை நோக்கி, “எனது அறையில் மாலை வரையில் தங்கவும் அதிலுள்ள எனது பெட்டி முதலியவற்றை எடுத்துச் செல்லவும் தளபதியின் அனுமதி உண்டா ?” என்று வினவினான்.
மஞ்சு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல், “ஹர்கோவிந்த்! நமது மாஜி உபதளபதி அவரது பழைய அறையில் மாலை வரை தங்கட்டும். மாலைக்குப் பிறகு அவரை அவரது பெட்டி படுக்கையுடன் அனுப்பி வை” என்று உத்தரவிட்டு வேகமாகத் தனது அறையை நோக்கி நடந்தாள்.
அவள் போவதை இதயசந்திரன் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் நடையில் முந்திய உரமில்லாததை அவன் கவனித்தான். சரீரத்தின் அழகும் யௌவனமும் சிறுதும் பாதிக்கப்படாவிட்டாலும் வாட்டம் சிறிது தெரியத்தான் செய்தது. வாட்டத்திலும், வீம்புக்கு அலட்சியம் காட்டி நடந்து சென்ற தோரணையிலும், ஏதோ உள்ளூரத் துன்பம் புரையோடிக் கொண்டிருந்ததை உணர்ந்தான். உணர்ந்தும் ஏதும் செய்ய வகையற்றுச் சிலையென சமைந்து நின்றான். தளபதி அறைக்குள் சென்று அவள் கதவை சாத்திக் கொண்ட பிறகே மற்றவர் களைக் கவனிக்க முற்பட்டு, மஞ்சுவின் தந்தையென உறவு கொண்டாடியவன் மீது கண்களை நாட்டினான்.
அந்த மனிதன் நல்ல உயரமும் பருமனுடனும் கூரிய கண்களுடனும் காட்சியளித்தான். அவன் இடையில் பெரிய வாளேதுமில்லாவிட்டாலும், கச்சையில்கூடக் குறுவாளோ கைத் துப்பாக்கியோ காணப்படாவிட்டா லும், அவன் பல போர்களைக் கண்டவனென்பதற்குச் சான்று கூற உடலில் பல காயங்கள் இருந்தன, கை கால்கள் அளவுக்கதிகமாகப் பெருத்து. சில இடங்களில் அனாவசியமாக உருண்டு, சில இடங்களில் அனாவசிய மாகச் சுருங்கியிருந்ததால் அழகுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லாவிட்டாலும் அவன் முகமும் கண்களும் கம்பீரத்தைக் காட்டின அந்தக் கம்பீரத்தில் சந்தேகிக்கக்கூடிய ஏதோ ஓர் அம்சமும் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தோன்றியது இதயசந்திரனுக்கு. ‘இவன் கண்காணிப்பதற்கு உரியவன்’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்ட இதயசந்திரன் தனது பழைய அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு நீண்ட சிந்தனையில் இறங்கினான். இரண்டு நாழிகைகளுக்குமேல் தனது மாலுமிப் பையையும், பெட்டி படுக்கைகளையும் சரிசெய்து அவற்றில் அடைக்க வேண்டிய உடை முதலியவற்றை அடைத்தான். தடுப்புப் பலகையில் அடித்த ஆணிகளில் தொங்கிக்கொண்டிருந்த தனது பழைய மகாராஷ்டிர வாளையும் ஆங்கரே கொடுத்த வெளிநாட்டுக் கைத்துப்பாக்கியையும் பையில் பத்திரப்படுத்தினான். அவன் அந்த அலுவல்களில் மும்முரமாயிருந்தபோது அவனது பெட்டி படுக்கைகளைக் கட்டுவதற்கு உதவி செய்ய பர்னாண்டோ அனுப்பிய இரு மாலுமிகளையும் தேவையில்லையென்று அனுப்பி விட்டான். இந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்கும் தருவாயில் மாலை முதிர்ந்து விட்டதால் வெளியே வந்து முகம் கை கால் கழுவிக் கொள்ளத் தளத்தின் கோடியிலிருந்த ஒரு தண்ணீர் பீப்பாயை நோக்கிச் சென்றான். கைகால் கழுவி, முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டு, தோளிலிருந்த துண்டு ஒன்றால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தலை நிமிர்ந்தான்.
கடற்காற்று சில்லென அவன் முகத்திலடித்தது. அவன் தலைமயிரிழைகள் சில பின்னால் பறந்தன. சில முன்னால் விழுந்தன். எங்கும் மெல்ல மெல்ல இருள் சூழ முயன்று கொண்டிருந்தது. மேலைக் கடலிருள் அவன் மதியையும் மெல்ல இருட்டடிக்கச் செய்தது. அந்த இருட்டில் சில தாரகைகளும் தோன்றின. அவை அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்தன. அதனால் தலையை ஓர் உலுக்கு உலுக்கிக் கண்களை ஆகாயத்தில் நிலைக்கவிட்டான்
இதயசந்திரன். திடீரென தாரகைகள் லட்சக்கணக்கில் எங்கும் தோன்றிவிட்டன.
எண்ணங்கள் பல எழுந்து மோத, கால்களை சுரணையின்றி அழைத்துச் செல்ல, மீண்டும் அறையை அடைந்த இதயசந்திரன் தனது மாலுமிப் பையையும் பெட்டியையும் ஒன்று சேர்த்துத் தூக்குவதற்குத் தயாராக வைத்தான். பிறகு அறையிலிருந்து புறப்பட்டுவிடுவது என நடந்து மஞ்சுவின் அறைக்குச் சென்று, “தளபதி!” என்று அறைவாயிலிலிருந்தே அழைத்தான்.
“கதவு திறந்திருக்கிறது” என்று உக்கிரச் சொற்கள் உள்ளிருந்து வரவே, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற இதயசந்திரன் ஒரு வினாடி திகைத்து நின்றான்.
மஞ்சு பஞ்சணையில் சற்று சாய்ந்து காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் குழல் அரைகுறையாக முடிக்கப்பட்டிருந்ததால் சிறிது கலைந்து இருந்தது. அவள் பிற்பகல் தன்னைச் சந்தித்தபோது அணிந்திருந்த சராயை நீக்கி, சேலை அணிந்திருந்ததால் நீட்டிய காலிலிருந்து சேலை சிறிது மேற்புறம் நகர்ந்து கிடந்தது. அவள் மல்லாந்திருந்த நிலையில் விம்மிக் கிடந்த அழகு. கண்ணைப் பறித்தது. உருண்ட திரண்ட இடங்கள் அவன் சிந்தனையைக் கண்டபடி உருட்டித் தள்ளின. அதே பஞ்சணையில் காதரைன்கூட அப்படித்தான் அரைகுறை யாகப் படுத்திருப்பாளென்பதை அவன் மனக்கண்ணில் எழுப்பிப் பார்த்தான். அது ஒருவித அழகு , இது ஒருவித அழகு. ஆனால் இது எத்தனை நிலையானது?’ என்று நினைத்து உள்ளத்தில் தான் இழந்தது எத்தனை பெரிய ஐசுவரியம் என்பதை உணர்ந்தான். தான் தொட்டுக் காட்டிய அந்த அழகும் தனக்கு எட்டாத ஒன்றாகிவிட்ட நிலையை எண்ணிப் பெரிதும் ஏங்கினான் தமிழன் அந்தச் சமயத்தில். ‘வெள்ளைக்காரியின் மயக்கத்தில் இந்தக் கொள்ளை அழகை இழந்து விட்டேனே!’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டான். தான் ஓர் இந்தியனென்பதற்காகத் தன்னை மணக்க மறுத்த காதரைனின் காலடியில் தான் கிடக்கவேண்டிய காரணமென்னவென்பது அவனுக்குப் புரிந்தது அந்த வினாடியில். ‘மஞ்சு அருகிலில்லாததுதான் காரணம். காதரைனைப் போன்ற ஓர் அழகியின் வலையிலிருந்து எந்த ஆடவன் எத்தனை நாளைக்குத்தான் தப்ப முடியும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
இப்படிப் பலப்பல நினைத்துப் பார்த்தது பார்த்தபடி நின்ற இதயசந்திரனை நோக்கிய மஞ்சு, “எங்கு வந்தீர்கள்?” என்று வினவினாள்.
”விடைபெற்றுப் போக வந்தேன்” என்றான் இதய சந்திரன் அவள் விழிகளுடன் தனது விழிகளை இணைத்து.
என்ன காரணத்தாலோ அவள் விழிகள் அவன் விழிகளைச் சந்திக்க மறுத்தன. அவற்றைச் சந்திப்பதற்குப் பதிலாகப் படுக்கையைப் பார்த்தன. காலில் மேலிருந்த சேலையைக் கைகள் இழுத்துவிட்டுக் கொண்டன.. மேலாடையையும் இழுத்துப் போர்த்திக் கொண்ட மஞ்சு, “நல்லது” என்றாள் மெதுவாக.
“உன் தந்தை, அதாவது இப்பொழுது புதிதாக..வந்திருப்பவர்…” என்று இழுத்தான்.
“அவருக்கென்ன?’ என்று கேட்டாள் மஞ்சு. அந்தக் கேள்வியில் விருப்புக்குப் பதில் வெறுப்பு இருந்தது.
“உண்மையில் அவர் உன் தந்தைதானா?” என்று வினவினான் இதயசந்திரன் மீண்டும்.
“தந்தை என்பதற்கான ருசுக்கள் இருப்பதாக ஸார்கேல் கூறுகிறார்” என்று அசட்டையாகப் பதில் சொன்னாள் மஞ்சு.
“உன் மனம் என்ன சொல்கிறது மஞ்சு? அது ஒப்புக்கொள்கிறதா?” என்று வினவினான்.
மஞ்சு அவனை ஏறிட்டு நோக்கினாள். “அதைக் கேட்க அவசியமில்லை” என்று சொன்னாள் சலிப்புடன்.
“ஏன் மஞ்சு?”
“அதற்கு உண்மை தெரிவதில்லை.”
“மனத்திற்கு உண்மை தெரியாமலிருக்குமா?”
“மற்றவர்கள் மனம் எப்படியோ! என் மனத்திற்கு .உண்மை தெரிவதில்லை. அது பொய்யை நிஜமாகக் காட்டு கிறது. நிஜத்தைப் பொய்யாகக் காட்டுகிறது. அதை நான் நம்பவில்லை இப்பொழுது. ஆகையால் பிறர் சொல்வதை நம்புகிறேன். பிறர் கொடுக்கும் ருசுக்களை நம்புகிறேன்” என்று கூறினாள் மஞ்சு. கூறிய பிறகு லேசாகத் துன்பத்துடன் பெருமூச்சும் எறிந்தாள்.
”மஞ்சு! மனத்தைக் குறை சொல்லிப் பயனில்லை. மனத்தை மீறி, இயற்கையை மீறி, உணர்ச்சிகளை மீறி நாமும் நடக்கிறோம். இயற்கை சுட்டிக் காட்டும் வழியைக் காரணமில்லாமல் எதிர்க்கிறோம். அதிலிருந்து தப்பப் பார்க்கிறோம். இவற்றாலும் விளைவதுண்டு விபரீதங்கள். இத்தனைக்கும் இடையே உண்மை சொல்வது மனந்தான்” என்றான் இதயசந்திரன்.
மஞ்சுவின் விழிகளில் கோபம் மெல்ல உதயமாயிற்று. “மனம் அவ்வப்பொழுது புதுப்புது உண்மையைச் சொல்லுமா?” என்று வினவினாள் அந்தக் கோபம் குரலிலும் ஒலிக்க.
“கூறாது’’
“அப்படியானால் முதலில் பானுதேவியையும், அடுத்து என்னையும், பிறகு வெள்ளைக்காரியையும் உங்கள் மனம் எப்படி ஏற்றுக்கொண்டது?”
“மஞ்சு! மனம் வேறு, உணர்ச்சிகள் வேறு என்று நினைக்கிறேன். நான் சாதாரண மனிதன், பெரிய ரிஷி அல்ல. புலன்களை அடக்கும் சக்தி உள்ளவன் அல்ல.. கவர்ச்சியான ஒரு பெண் அருகில் வந்து அத்துமீறி,. என்னுடன் பேசியும், அருகில் இணைந்தும் பேசும்போது உணர்ச்சிகள் என்னை மீறுகின்றன. அந்தச் சமயத்தில் பெண்களைத் தொட்டிருப்பேன். அதற்குமேல் வரம்பு மீறியதில்லை. பானுதேவி அரசியலுக்கு உபயோகப் படுத்த என்னுடன் உறவாடினாள். காதரைன் என்னுடன் சரசமாட விரும்பினாள். ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மணம் செய்து கொள்ள முயன்றேன்.. ஏன்? உன் தந்தை உன்னை எனக்கு மணம் முடித்துத் தர மறுத்து, காதரைன் போன்ற அழகியுடன் இஷ்ட விரோத. மாக என்னை அனுப்பினார். அவள் விரித்த வலை யிலிருந்து தப்ப முயன்றேன் பல நாட்கள். தனியாகப் பெண்ணுடன் பெருங்கடலில் விடப்பட்டவன். அவள் எழுப்பிய அலைகளில் விழுந்து தத்தளித்தேன். என்ன செய்வேன் அந்த நிலையில்? விபசாரம் செய்ய இஷ்ட. மில்லை. அதை என் கண்ணியம் மறுத்தது, மனம் மறுத்தது. ஆகவே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். அவள் மறுத்தாள் நான் கறுப்பனென்று. நான் கட்டாய மாகத் திருமணம் செய்து கொண்டிருப்பேன், ஒரு. பெண்ணை கெடுப்பதைவிட திருமணம் செய்துகொள்வது நல்லதென்று. அது பலிக்கவில்லை. அவள் சென்று விட்டாள் அவள் வழியில். அதனால் நான் மனம் உடைய வில்லை. ஏனென்றால் மனம் அவளிடமிருந்ததில்லை, அது எப்பொழுதும் உன்னுடையது மஞ்சு. இது சத்தியம்.”
இப்படி உரைத்து மன்றாடி நின்ற இதயசந்திரனுக்கு. மஞ்சு பதில் ஏதும் சொல்லவில்லை பல விநாடிகள். கடைசியில் சொன்ன பதிலில் உறுதியிருந்தது. “கடலில் அலையும் இரு மரப் பலகைகளைப் போல் திடீரென எங்கிருந்தோ வந்து எங்கோ ஒன்று சேர்ந்தோம். மீண்டும் எங்கோ விலகிச் செல்கிறோம். முன்பு விஜயதுர்க்கத்தில் விலக்கியது என் புதிய தந்தையை அறிவித்த ஜன்ஜீராத்
தலைவர் ரஸுல் யாகூத்கான் கடிதம். இரண்டாவது பிரித்தது அந்த வெள்ளைக்கார மோகினி. இப்பொழுது பிரிப்பது மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் புயல். நாம் மீண்டும் சந்திப்போமோ அல்லவோ சொல்ல முடியாது. சந்திப்பிலும் நாமிருவரும் முழு மனத்துடன் ஒன்ற முடியாது இனிமேல். என் மனம் உங்களை ஏற்க மறுக்கிறது. ஆகவே போய் வாருங்கள்.”
இதயசந்திரன் அவளுக்கு வெகு அருகில் வந்து நின்றான். “இதுதான் முடிவா! இப்படித்தான் பிரிவா!”
“ஆம்” என்றாள் அவள் திடமாக.
“ஏன்?”
அவள் படுக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு வெகு அருகில் வந்து, ”நீங்கள் ஆண்மகன் தானா?” என்று சீறினாள்.
அவள் கண்களில் விவரிக்க இயலாத சீற்றமிருந்தது. உதடுகளில் துடிப்பிருந்தது. அவனுக்கு அதுவரை புலனாகாத உண்மை புலர்ந்தது. விரிந்தது ஓர் இன்ப .உலகம்.